எங்கள் சிறு தொழில்முனைவோரை உருவாக்குதல்

COVID-19 தொழில்முனைவோரை குறிப்பாக சிறு தொழில்முனைவோரை மிகவும் மோசமாக பாதித்துள்ளது. வங்கிகள் மூலம் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட கடன் திட்டங்கள் இந்த தொழில்முனைவோருக்கு சாதகமாக இருக்கவில்லை, காரணம் அவர்களிடம் கடனுக்கு ஈடுகொடுக்கப் போதுமான சொத்துக்களில்லை;

துரதிர்ஷ்டவசமாக நம் நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளில் பெரும்பகுதி இந்த சிறு வணிகங்களின் கைகளில் உள்ளன, இதுபோன்ற தொழில்களைப் பாதுகாப்பதும் பலப்படுத்துவதும் மிக முக்கியமானது.

இந்த விடயத்தில் நாம் செய்தவையைப் பார்க்க

  • சிறு தொழில்முனைவோருக்கு நியாயமான வட்டி விகிதத்தில் வங்கிகள் மற்றும் பிற முறையான நிதி நிறுவனங்களிடமிருந்து கடன் பெறக்கூடிய கடன் மாதிரியை உருவாக்குவதில் நாங்கள் பணியாற்றி வருகிறோம்.

  • மேற்சொன்னவற்றைப் புரிந்துகொள்கின்ற, வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் இது போன்ற பிறநிறுவனங்களுடன் தொடர்பு கொண்டிருக்கக்கூடியவர்களையும்,  எங்களுக்கும் இதுபோன்ற ஆர்வமுள்ள தரப்பினருக்கும் இடையில் ஒரு இணைப்பாக இருக்குமாறு அழைக்கிறோம்.